1925 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி பிறந்த சந்தானராஜகோபாலனுக்கு இன்று 100 வது பிறந்தநாள் விழா அவரது வீட்டில் கொண்டாடப்பட்டது.
இவரது 8 மகன் மற்றும் மகள்களின் பிள்ளைகள், அவர்களின் பிள்ளைகள் என சந்தானராஜகோபாலனின் 21 பேரப்பிள்ளைகள், 40 கொள்ளு பேரன் பேத்திகள், 1 எள்ளு பேரன் என தனது இரத்த உறவினர்களுடன் ஒன்றிணைந்து தன்னுடைய 100 வது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். விழாவிற்கு வந்தவர்கள் பெரியவர் சந்தானராஜகோபாலனுடன் ஆசி பெற்று சென்றனர்.