திருவள்ளூர்: வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை கொள்ளை

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கர்லம்பாக்கம் கிராமத்தில் பத்திரப்பதிவு எழுத்தாளர் பழனி என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 100 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது. பழனி தனது மகளைப் பார்க்க இரண்டு நாட்களுக்கு முன்பு ஆந்திரா சென்றிருந்த நிலையில் இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளது. தகவல் அறிந்து வந்த பொதட்டூர்பேட்டை போலீசார், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி