தேவிபுரத்தில் தூர்வாரப்பட்ட ஓடை: பொதுமக்கள் நிம்மதி

திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 23வது வார்டுக்கு உட்பட்ட தேவிபுரத்தில் ஓடையில் மண் நிறைந்து கழிவுநீர் செல்லாமல் தேங்கியதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 18 அன்று 23வது வார்டு கவுன்சிலர் அனார்கலி அப்துல் சுபஹானியின் ஏற்பாட்டில் தூய்மைப் பணியாளர்கள் மூலம் ஓடையில் இருந்த மண் அப்புறப்படுத்தப்பட்டு வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி