பாளை: வாக்காளர்களை தேடி வீடு வீடாக சென்ற அதிகாரிகள்

நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக அச்சிடப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களிடம் வழங்கப்படுகின்றன. பாளை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சாந்தி நகர் பகுதியில் நேற்று நடைபெற்ற இந்தப் பணியை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சுகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி