சுத்தமல்லி: துண்டு பிரசுரங்கள் விநியோகம்

நெல்லை தொகுதி சுத்தமல்லி நகரம் சார்பாக மக்கள் நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் சிறப்பு முகாம் வருகிற 29ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சுத்தமல்லி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற உள்ளது. 

இதில் பொதுமக்கள் கலந்துகொள்வதற்காக இன்று (டிசம்பர் 27) எஸ்டிபிஐ கட்சியின் சுத்தமல்லி நிர்வாகிகள் ஜும்மா பள்ளிவாசல்கள் முன்பு துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்து அழைப்பு விடுத்தனர். இந்த நிகழ்வின்போது நிர்வாகிகள் பயாஸ், ஜாஹிர், சதாம், ரஹ்மதுல்லா, அன்சாரி, ரபீக், பீர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி