தேனி மாவட்டம் சின்னமனூர்-போடிநாயக்கனூர் சாலையில் சங்கராபுரம் அருகே அரசு பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். பேருந்து திடீரென வழியில் நின்றதால், பயணிகள் தங்கள் பயணத்தைத் தொடர முடியாமல் தவித்தனர். இதுகுறித்து பயணிகள் கூறுகையில், அரசு பேருந்துகளை முறையாகப் பராமரித்து, மக்கள் பயன்பாட்டிற்குச் சீராக இயக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.