வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் தஞ்சை, திருவள்ளூர், சென்னை, திருவாரூர், கோவை ஆகிய 5 மாவட்டங்களுக்கு இரவு 7 மணி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.