அப்பகுதியில் பாலம் அருகே முயல் ஒன்று ஓடுவதை சரவணன் பார்த்துள்ளார். உடன் அந்த முயலை பிடிப்பதற்காக வேகமாக சரவணன் ஓடினார். ஆனால் எதிரில் ஜல்லி ஏற்றிக்கொண்டு வந்த டாரஸ் லாரியை கவனிக்காமல் குறுக்கே ஓடினார். வேகமாக வந்த லாரி சரவணன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சரவணன் படுகாயம் அடைந்தார். உடன் அவரை தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே சரவணன் இறந்து விட்டார். தந்தை கண் முன்பே லாரி மோதி மகன் இறந்த சம்பவம் செங்கிப்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2006 எம்எல்ஏ முதல் 2026 அமைச்சர் வரை.. புஸ்ஸி ஆனந்தின் வளர்ச்சி