கும்பகோணத்தில் அதிமுக நிர்வாகி உருவ பொம்மை எரிப்பு

தலித் சமுதாயம் குறித்து அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி கோவை சத்யன் தவறாக பேசியதாகக் கூறி, கும்பகோணத்தில் விடுதலை தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின் போது, கோவை சத்யனின் உருவ பொம்மையை எரித்ததால், மாவட்ட செயலாளர் விஜய் ஆனந்த் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். காவல் ஆய்வாளர் சிவ செந்தில் குமார் தலைமையில் போலீசார் உருவ பொம்மையை அணைத்தனர்.

தொடர்புடைய செய்தி