தமிழக மீனவர்கள் 35 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 35 மீனவர்களை, இலங்கை கடற்படை கைது செய்தது. மீனவர்கள் சென்ற 3 விசைப்படகு மற்றும் ஒரு நாட்டுப் படகையும் பறிமுதல் செய்தது. மீனவர்கள் 35 பேரையும் யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி