சிவகங்கை: பேரூராட்சி செயலால் மக்கள் அவதி

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில், ராமேஸ்வரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள பகுதிகளில் குப்பைகள் குவிக்கப்பட்டு, அவை பேரூராட்சி நிர்வாகத்தால் முறையாக அகற்றப்படாமல் தீ வைத்து எரிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

அந்தப் பகுதி முழுவதும் கரும் புகை பரவி, வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கண் எரிச்சல், மூச்சுத் திணறல் போன்ற சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகவும் மேலும், வைகையாற்று பகுதியில் கூட, குப்பைகளை கொட்டி, திட்டமிட்டு தீ வைக்கப்படுவதாகவும், இதனால் அப்பகுதி மக்களில் கடும் வேதனை தெரிவிக்கின்றனர்

தொடர்புடைய செய்தி