சமூக நீதி விடுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கா. பொற்கொடி இன்று ஆய்வு மேற்கொண்டார். மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், சுகாதாரம், மற்றும் கற்றல் திறன் குறித்து நேரில் ஆய்வு செய்து, மாணவர்களுடன் கலந்துரையாடினார். கல்வியில் முன்னேறவும், சுகாதாரத்தில் கவனம் செலுத்தவும் ஆட்சித்தலைவர் மாணவர்களுக்கு வழிகாட்டுதல்களையும் அறிவுரைகளையும் வழங்கினார்.