சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இளங்குடி கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இறந்தவர்களின் உடல்களை மயானத்திற்கு கொண்டு செல்ல முறையான பாதை இல்லாததால், முழங்கால் அளவு தேங்கி நிற்கும் கண்மாய் நீரில் சுமந்து செல்லும் அவல நிலை நீடிக்கிறது. கிராம மக்கள் இப்பிரச்சினைக்கு தீர்வு காணவும், முறையான பாதை அமைத்து தரவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.