புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே குமரப்பன் வயல் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டு தகவல் அளித்ததன் பேரில், அவர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இது குறித்து மீமிசல் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.