சிறைக்கைதியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

சிறைக்கைதிகள் நோய்வாய்ப்பட்டால் உரிய நேரத்தில் வெளி மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு சேலம் மத்திய சிறையில் கைதி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தது தொடர்பான வழக்கின் விசாரணையில், அவர் உரிய நேரத்தில் அவர் வெளி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படவில்லை என்பது உறுதியானதால், அவரின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி