நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், 7-வது வார்டு, சட்டையம்புதூர் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பாலாஜி, தள்ளுவண்டி வேண்டி சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரனிடம் கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை ஏற்று, சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் அவருக்கு பரிந்துரை செய்து தள்ளுவண்டி வழங்கினார். இந்நிகழ்வின் போது கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.