கெட்டிமேடு பகுதியில் வரும் 24ம் தேதி மின்சாரம் நிறுத்தம்

நாமக்கல் கோட்டத்தில், அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின்சார விநியோகம் செய்வதற்காக, ஒவ்வொரு துணை மின் நிலையத்திற்கு உட்பட பகுதியிலும், மாதந்தோறும் பராமரப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டம் கெட்டிமேடு, துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வருகிற 24ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சாரம் தடை செய்யப்படும்.

இதனால் கோணங்கிப்பட்டி, பொன்னேரி, காளிசெட்டிப்பட்டி, புதுக்கோட்டை, அ. பாலப்பட்டி, ஈச்சவாரி, பொம்மசமுத்திரம், கனவாய்ப்பட்டி, கெட்டிமேடு, பொட்டிரெட்டிப்பட்டி, பீமநாய்க்கனூர், பெருமாப்பட்டி, தூசூர், கொடிக்கால்புதூர், ரெட்டிப்பட்டி மற்றும் கெட்டிமேடு துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் வரும் 24ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி