நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூரில், பிள்ளாநல்லூர் பேரூர் இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் நாகமாணிக்கம் அவர்களை இராசிபுரம் மேற்கு ஒன்றிய தவெக செயலாளர் வேலு பிரபாகரன் மற்றும் பிள்ளாநல்லூர் பேரூர் தவெக செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் சந்தித்து, தவெக கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணியை தொடர்ந்து மகிழ்ச்சியை தெரிவித்து இனிப்பு வழங்கினார்கள். இந்த சந்திப்பின் போது கட்சி நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.