மதுரை: ரயிலில் இருந்து தவறி விழுந்து பலி

மதுரையைச் சார்ந்த ரயில்வே மின்சார பிரிவில் பணிபுரியும் விஜயகுமார், நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் அந்தோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுரைக்குச் சென்றுகொண்டிருந்தபோது, விருதுநகர் கவுசிகா நதி பலத்திற்கு அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து விபத்துக்குள்ளானார். இதில் அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு சென்ற ரயில்வே போலீசார் விஜயகுமாரின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி