மதுரை: முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி மற்றும் 62 வது குருபூஜை விழா நடைபெறுகிறது. இவ்விழாவையோட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வெங்கல சிலைக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு கீழ் உள்ள முத்துராமலிங்க தேவரின் திருவுருவ படத்திற்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் பூக்கள் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்வில் அமைச்சர்கள் மூர்த்தி, பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன், ஐ. பெரியசாமி, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், டி. ஆர். பி. ராஜா, பெரியகருப்பன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மேயர் இந்திராணி உள்ளிட்டோர்கள் பங்கேற்றனர்.

பின்னர் இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்க்காக காரில் புறப்பட்டு சென்றார். இதன் பின்னர் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், வி. கே. சசிகலா, சீமான், ஜி. கே. மணி, ஒ. பன்னீர்செல்வம், துரை வைகோ, திருநாவுக்கரசர் ஆகியோரும் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளனர்.

முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாக்களை அடுத்து மதுரை மாவட்டத்தில் 5, 000 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியினை மேற்க் கொண்டு வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி