ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று விண்ணில் பாய்ந்த எல்​விஎம்-3 ராக்​கெட்

ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சிஎம்​எஸ்​-03 செயற்கைக்​கோள் உடன் எல்​விஎம்-3 ராக்​கெட் இன்று (நவ.2) ஏவப்பட்டது. 24 மணிநேர கவுண்டவுன் தொடங்கிய நிலையில், மாலை 5.26 மணிக்கு விண்​ணில் செலுத்​தப்பட்டது. நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த ஆயிரத்து 600 கோடி ரூபா​யில் அதிநவீன சிஎம்​எஸ்​-03 செயற்கைக்​கோளை இஸ்ரோ வடிவ​மைத்​துள்ளது.  முன்னதாக இந்த திட்டம் வெற்றியடைய வேண்டி திருப்பதி கோயிலில் இஸ்ரோ தலைவர் நாராயணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் வழிபாடு நடத்தினர்.

நன்றி: ANI

தொடர்புடைய செய்தி