கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரைச் சேர்ந்த ராமராஜன் மனைவி யமுனா மற்றும் மகன் அருண் ஆகியோர் நேற்று (நவ.2) திருப்பத்தூருக்கு பூ வாங்கச் சென்று திரும்பியபோது, மல்லப்பாடி அருகே சரக்கு வேன் மோதி படுகாயமடைந்தனர். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். பர்கூர் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.