கிருஷ்ணாயபுரம்: வேலைக்கு சம்பளம்தர மறுத்தவரை பணிநீக்கம் செய்ய ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலை- சம்பளம் தர மறுத்த வரை பணிநீக்கம் செய்ய ஆர்ப்பாட்டம். கிருஷ்ணாயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயிலில் நேற்று (டிச.23) மாலை, அருகிலுள்ள சிந்தலவாடி கிராமத்தில் 100 நாள் வேலை செய்த தொழிலாளிக்கு 2 நாள் சம்பளம் வழங்கப்படாது என்று கூறிய பணிதல பொறுப்பாளர் வள்ளி என்பவரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டம் CPI(M) கிளைச் செயலாளர் பட்டு தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் நாகராஜன், மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன், CPI-M ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம் உள்ளிட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார். பிறகு 35 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனுவை PDO இடம் வழங்கினர். மனுவை பெற்றுக் கொண்ட PDO உடன் நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்ததின் பேரில், ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி