தற்போது, புதிதாக போடப்பட்ட ஆறுவழி சாலையோரம், மழை பெய்தால் தண்ணீர் வடியும் அளவிற்கு வடி கால்வாய் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டிருப்பதால், மழை பெய்த பின் தண்ணீர் வடியாமல் உள்ளது. இதனால், அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தண்ணீரில் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
வெள்ளைகேட் மேம்பாலம் அருகே, வாகனங்கள் எதிரெதிரே செல்லும் போது, மழைநீர் மற்றொரு வாகனத்தின் மீது தெளிக்கும் சூழல் ஏற்படுகிறது.
எனவே, சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம், தேங்கி இருக்கும் மழைநீரை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.