செங்கல்பட்டில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலி

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் மேம்பாலம் அருகே, ஜி.எஸ்.டி. சாலையில் சென்னை மார்க்கத்தில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மறைமலை நகர் போக்குவரத்து போலீசார் மற்றும் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, இறந்த நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி