புதுப்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத கார், இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றுள்ளது. இதில், மனோகரன் தூக்கி வீசப்பட்டு, பலத்த காயமடைந்தார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வழியாக, மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சைப் பலனின்றி மனோகரன் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த மதுராந்தகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.