காசாவுக்கு மனிதாபிமான உதவிகளை கொண்டு செல்ல முயன்ற சுமார் 40க்கும் மேற்பட்ட கப்பல்களை இஸ்ரேல் ராணுவம் இடைமறித்து சிறைபிடித்தது. கப்பல்களில் இருந்த கிரேடா துன்பர்க், ரீமா ஹாசன், தியகோ அவிளா உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டனர். இஸ்ரேலிய அரசால் தாங்கள் கடத்தப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.