அரச்சலூர் அருகே வங்கி ஊழியர் தற்கொலை

ஈரோடு அடுத்த பள்ளியூத்தைச் சேர்ந்தவர் நவநீதன் (34). கோ ஆப் வங்கியில் உதவி செயலாளராக வேலை செய்து வந்த அவருக்கு, மதுப்பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த 29ம் தேதி இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த நவநீதனுக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து, அவருக்கு உறவினர்களை காலையில் மருத்துவமனைக்கு செல்லலாம் என ஆறுதல் கூறியிருக்கின்றனர். ஆனால், வயிற்று வலி தாங்க முடியாததால், உறவினர்கள் சென்றவுடன், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி தென்றல் அளித்த புகாரின் பேரில், அறச்சலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்தி