இதையடுத்து சீனிவாசன் அங்கு சென்று பார்த்தபோது, தரணீஷ் காவிரி ஆற்றில் மூழ்கி மீட்கப்பட்டதும், அதன் பின்னர் அவரை அங்கிருந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்த்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, சீனிவாசன் அங்கு சென்று, உயர் சிகிச்சைக்காக தரணீஷை பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு தரணீஷை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.