பவானி: காவிரி ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி

ஈரோடு மாவட்டம், பவானி, மேற்கு தெரு, மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் சீனிவாசன் (49). இவரது மகன் தரணீஷ் (17). நேற்று (டிசம்பர் 23) காலை 11 மணியளவில் காவிரி ஆற்றுக்கு சென்று குளித்துவிட்டு வருவதாக கூறி சென்ற தரணீஷ் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. 

இதையடுத்து சீனிவாசன் அங்கு சென்று பார்த்தபோது, தரணீஷ் காவிரி ஆற்றில் மூழ்கி மீட்கப்பட்டதும், அதன் பின்னர் அவரை அங்கிருந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்த்ததும் தெரிய வந்தது. 

இதையடுத்து, சீனிவாசன் அங்கு சென்று, உயர் சிகிச்சைக்காக தரணீஷை பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு தரணீஷை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி