சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று, தக்காளி பாரம் ஏற்றிச் சென்ற வேனை வழிமறித்து, வேனில் இருந்த தக்காளி கூடைகளை இழுத்து சுவைத்தது. இதனால் வாகன ஓட்டி அச்சமடைந்தார். ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகளால் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும், வனத்துறையினர் இரவு பகலாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.