தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்திருந்தது. காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் மொத்தம் 86.70 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. இதில் அதிக அளவாக பவானியில் மட்டும் 28.20 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. ஈரோடு மாவட்டத்தில் காலை 8 மணி வரையிலான நிலவரப்படி பெய்திருந்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு: பவானி - 28.20, கவுந்தப்பாடி - 9.40, அம்மாபேட்டை - 10.20, வறட்டுப்பள்ளம் அணை - 0.03, கோபி - 13.20, எலந்தக்குட்டை மேடு - 3.80, கொடிவேரி அணை - 3, குண்டேரி பள்ளம் அணை - 11.60, சத்தியமங்கலம் - 3, பவானிசாகர் அணை - 4. தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக வரும் 31ம் தேதி வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பீகாரில் ஏழுமலையான் கோவில்: 10 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு