அந்தியூர் வார சந்தையில் வெற்றிலை விற்பனை நடைபெற்றது. அத்தாணி, ஆப்பக்கூடல், வெள்ளி, திருப்பூர், சந்தியபாளையம், காட்டுப்பாளையம், வெள்ளையம்பாளையம், வேம்பத்தி பகுதிகளில் இருந்து விவசாயிகள் வெற்றிலைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ராசி வெற்றிலை கட்டு ஒன்றுக்கு ரூ 130க்கும், பீடா வெற்றிலை கட்டு ஒன்றுக்கு ரூ 60க்கும் விற்பனை செய்யப்பட்டது. மொத்தம் ரூ 3 லட்சம் மதிப்பிலான வெற்றிலை விற்பனையானது. வியாபாரிகள் ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி பகுதிகளில் இருந்து வந்து வெற்றிலைகளை வாங்கிச் சென்றனர்.