திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பாக இருக்கும் பஸ் ஸ்டாப் நிழற்குடை முன்பு பஸ்கள் நிறுத்தப்படாததால் அது டூவீலர் நிறுத்துமிடமாகி மாறியுள்ளது. பஸ்களோ அதற்கு முன்பாக ரோட்டோரம் நின்று செல்வதால் பயணிகள் ரோட்டில் மழை, வெயிலில் நின்று பஸ் ஏறும் நிலை உள்ளது. ஆக, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதியில் கோரிக்கை எழுந்துள்ளது.