அரூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் மற்றும் மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்ததாகக் கூறி, ஹோட்டல் மற்றும் பெட்டிக்கடைகளில் மது அருந்த அனுமதித்த 9 பெண்கள் உட்பட 31 பேரை அரூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 676 மது பாட்டில்கள் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.