கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த தொட்டிகுப்பத்தில், ஆனந்தி (38) என்பவர் தனது கணவரின் அத்தை கண்ணம்மாள் (55) என்பவருடன் ஏற்பட்ட தகராறில், வீட்டில் இருந்த கத்தியால் அத்தை கண்ணம்மாவின் வலது கையில் வெட்டியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தியை நேற்று முன்தினம் (நவ.3) கைது செய்தனர்.