வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பயிர்கடன் வழங்கும் திட்டத்தை தருமபுரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.17) தொடங்கி வைத்தார். விவசாயிகள் இணைய வழியில் விண்ணப்பித்த அன்றே அவர்களது வங்கி கணக்கில் பயிர்க்கடன் வழங்கும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை கடன் பெற முடியும். சென்னை, கிருஷ்ணகிரி, மற்றும் மதுரை மாவட்டங்களில் சோதனை முறையில் தொடங்கப்பட்ட இத்திட்டம் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.