கோவை அன்னூர் அருகே ரேஷன் அரிசி கடத்திய தமிழ்ச்செல்வன் (58) என்பவர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார். அன்னூர் பகுதியில் ரோந்து சென்றபோது மொபட்டில் அரிசி கடத்தியது தெரியவந்தது. அவரிடமிருந்து 90 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.