கோவையில் தனியார் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் குறித்து மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி பாதிக்கப்பட்ட மாணவியையும் அவரது நண்பரையும் மருத்துவமனையில் சந்தித்து விசாரித்தார். மாணவிக்கு பாதுகாப்பும் மனநல ஆலோசனையும் வழங்கப்படுவதாகவும், சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.