சூலூர் பி. டி. ஓ. காலனியில் பெயிண்டர் ராபின், நண்பர் ஆனந்தனுடன் ஏற்பட்ட தகராறில் மது பாட்டிலால் தலையில் தாக்கப்பட்டார். காயமடைந்த ராபின் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சூலூர் போலீசார் ஆனந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.