கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த ராஜம்மாள் (72) என்பவர் நேற்று கோவை-தடாகம் சாலையில் நடந்து சென்றபோது, அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தலையில் பலத்த காயமடைந்த ராஜம்மாளின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக கோவை மாநகர மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.