கோவை துயரம் மனிதத்தன்மையற்றது: முதலமைச்சர் காட்டம்

கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது; இத்தகைய கொடூர குற்றச் செயல்களைக் கண்டிக்க எந்தக் கடுஞ்சொல்லும் போதாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை விரைந்து பெற்றுத் தர, காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன். நம் மகளிர் அனைத்துத் துறைகளிலும் அடையும் முன்னேற்றம்தான் இத்தகைய வக்கிர மிருகங்களின் ஆணாதிக்க மனநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி