சென்னையின் கொடுங்கையூரைச் சேர்ந்த 51 வயதான பெயிண்டர் சேகர், நேற்று மாலை பெயின்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கூரை ஓடு உடைந்து கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.