குளச்சல் துறைமுக விரிவாக்கப் பணிகளைத் தொடங்க வேண்டும் என குமரி மாவட்ட மீனவர்கள் முதல்வர் மு. க. ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டின் இந்த நியாயமான கோரிக்கையை ஒன்றிய நிதியமைச்சர் ஏற்றுக்கொண்டு, விரைவில் உரிய நிதியை விடுவிப்பார் என முதல்வர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.