தவெக தலைவர் விஜய்யின் பரப்புரை வாகனம் மற்றும் அதன் ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பைக் ஓட்டிச் சென்ற இருவர் மீதும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு பேருந்து ஓட்டுநர் நிறுத்தாமல் சென்ற வீடியோ வைரலான நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியிருந்தது. அடுத்தகட்ட நடவடிக்கையாக பேருந்து பறிமுதல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நன்றி: சன் செய்தி