சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பாமக எம்எல்ஏ அருள் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி தரப்பினர் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எம்எல்ஏ அருள் சென்று கொண்டிருந்த காரை நடுவழியில் நிறுத்தி ஒரு கும்பல் கற்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து இருதரப்பினர் இடையே கடும் மோதல் வெடித்தது. கட்டை, கற்கள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
நன்றி: சன் செய்தி