ஜெயங்கொண்டம் அருகே வீராக்கன் கிராமத்தைச் சேர்ந்த 93 வயது விவசாய கூலி தொழிலாளி பிச்சப்பிள்ளை, ஆமணக்கந்தோண்டியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே நடந்து சென்றபோது, பின்னால் வந்த தனியார் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.